Tamil News large 162540620161011212226
செய்திகள்இலங்கை

பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!!

Share

பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!!

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு விற்கும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ரூபா ஒரு லட்சம் முதல் லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்று வெயிடப்பட்டுள்ளது என்று நுகரவோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

புதிய தண்டப்பண திருத்தத்தின் படி தனி வியாபாரி என்றால் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனமாக இருந்தால் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அது ஆகக் குறைந்த தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபாவாகவும் ஆக்கூடியது 5 லட்சம் ரூபா எனவும் அதிகரிக்கப்பட்டிருகின்றது.

அதே நபர் இரண்டாவது தடவையாகவும் அந்த குற்றத்தை செய்தால் தற்போது இருக்கும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று ஒரு நிறுவனம் இந்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் 10 ஆயிரம் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரையான தண்டப்பணம் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதே நிறுவனம் இரண்டாவது தடவையாகவும் குறித்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் ரூபா 20 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையான தண்டப்பணம் 10 லட்சம் முதல் 100 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...