selvam 1
செய்திகள்இலங்கை

பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

Share

சிகரெட்டிக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இக்கடிதம் நேற்றய தினம் அனுப்பப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது என்ற கேள்வியும் கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் கடிதத்தில், ஒரு சிகரெட்டின் விலையை 20.00 ரூபாவினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயை இழக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சிகரெட் பயன்பாட்டிற்கு அடிமையாகி காணப்படுவதால் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...