WhatsApp Image 2021 08 11 at 15.09.58
செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!

Share

பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!

பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன.

கிராமக்கோட்டு சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்-புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையுமே இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு கடைகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் அண்மைக்காலமாக பல்வேறு பதுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...