நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!
செய்திகள்இலங்கை

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

Share

நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!

அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு  ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது.

அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டம் 2 ஆயிரத்து 500 ரூபா என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகின்றன.

எனவே தண்டப்பணத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...