IMG 20210817 WA0013
செய்திகள்உலகம்

நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

Share

நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!!

நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று  நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி நியூஸிலாந்து முழுவதும் நாளை புதன்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் சென்றுவந்த கடலோர நகரம் ஏழு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

4 ஆம் நிலையில் கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் சுமார் 2,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...