ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் மின்சார தடை ஏற்படும் ! – முன்னாள் பிரதமர்.

Share

போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (29) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உணவுப் பொருள் தட்டுபாடு போல, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் அந்நிய செலாவணியாக நாட்டில் காணப்பட்ட டொலர்கள், தங்க நகைகளின் பெறுமதிகளை டொலர்களில் சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை மத்திய வங்கி அனுப்பியிருக்கும்.

இந்தத் தகவல்களை சபாநாயகர் அல்லது இராஜாங்க அமைச்சர்கள் அந்த வங்கியிடமிருந்து பெற்று சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இதன்போது குறுக்கீடு செய்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் ஏற்பட்டிருக்கும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன என்றார்.

எனினும் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இதனால் எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...