தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிப் பயன்பாட்டின் அதிகரிப்பு காரணமாக இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் (Diabetes) அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மதுரை அரச மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளியிளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணிகள் இந்த நிலைமையை மேலும் அதிகரிப்பதாக அமைகின்றன.
கொரோனா தொற்றுக்குப் பிறகு, நீரிழிவு நோய் பாதிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்ற திரைகளுடன் கூடிய சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, உடல் உழைப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

