80ebcdee 238a226f curfew guard
செய்திகள்இலங்கை

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

Share

தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வார இறுதிநாள்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு அமுல்படுத்தலை ஒரு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. நாட்டை உடனடியாக முடக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...