OMugyjDW
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் ‘சிறிலிய சவிய’ (Siriliya) அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ஆம் திகதி அவர் அழைக்கப்படிருந்த போதிலும், மருத்துவக் காரணங்களால் சமூகமளிக்கவில்லை. இதனால் இன்று (பெப். 03) காலை 9:30 மணியளவில் முன்னிலையாகுமாறு மீளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்புகள் மற்றும் ஏனைய சில குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இன்று சிஐடி-யில் ஆஜராகியுள்ளார்.

இந்திய விஜயம் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதியில் அவர் சமூகமளிக்காத நிலையில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...