கொவிட் தொற்றால் மேலும்195 பேர் சாவு!!
இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 195 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகளவு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக உயர்ந்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment