image 75e605e1f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் சோகம்: ரயில் மோதி 82 வயது முதியவர் பரிதாப மரணம்!

Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி (82 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘யாழ்ராணி’ ரயிலுடன், உதயநகர் பகுதியிலுள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் போதிய பாதுகாப்பு சமிக்ஞைகள் இருந்ததா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

ரயில் கடவைகளைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...