images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

Share

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக, இன்று (ஒக்டோபர் 28) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த பகுதியில் வைத்து குறித்த பெண் சட்டத்தரணியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கியை மறைக்க உதவிய சட்டத்தரணி

சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைப்பதற்காக இந்தச் சட்டத்தரணி இஷாரா செவ்வந்திக்கு உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் மூளையாகச் செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை எடுத்துச் சென்று வழங்கியதாகக் கூறப்பட்டு வலைவீசித் தேடப்பட்டார். அவர் மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.

 

விசாரணையும் கைதுகளின் எண்ணிக்கையும்

இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.

 

இந்தச் சங்கிலித் தொடர் விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்திக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை இந்தப் பெண் சட்டத்தரணியையும் சேர்த்து 11 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று பேரும் (சட்டத்தரணி கைதுக்கு முன்வரை) நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது..

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...