உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று
செய்திகள்இலங்கை

கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு!

Share

கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைக் கடற்கரையில் 65 வயது முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வழமையாக கடலுக்குக் குளிக்கச் செல்லும் இவர், இன்றும் வழமைபோன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார்.

இவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிச் சென்றபோது கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...