upfront lede 052957753
செய்திகள்இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: பெப்ரவரி 27, 28 இல் கோலாகலம் – 25,000 பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு!

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்படை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து சுமார் 25,000 பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, கடற்படையினரின் ஒத்துழைப்புடன் படகுப் போக்குவரத்துகளை முறைப்படுத்துவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகத் திகழும் இந்தப் பெருவிழாவிற்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவானது இரு நாட்டு மீனவர்கள் மற்றும் கத்தோலிக்கப் பக்தர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய கலாசார நிகழ்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...