உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்க தீர்மானம்!!
இலங்கையில் நேற்றுமுன்தினம் (12) முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் விசேட வியாபார பண்ட வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்கள் சிலவற்றுக்கே இந்த விசேட வரி விதிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
நெத்தலி, கருவாடு, குரக்கன் மா மற்றும் கடுகு என்பவற்றுக்கே இந்த வரி விதிக்கப்படவுள்ளது.
நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்கு 100 ரூபா எனவும் வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா எனவும் குரக்கன் மா கிலோவொன்றுக்கு 150 ரூபா எனவும் மற்றும் கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபா எனவும் வரி விதிக்கப்படவுள்ளது.
Leave a comment