richar 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

Share

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்  தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் உரிமையாளருடன், ரிஷாத் பதியுதீன் தொடர்புகொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்  காரணமாக ரிஷாத் பதியுதீன் கைதானமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...