Baticaloa Depot
செய்திகள்இலங்கை

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

Share

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ் டிப்போ மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எட்டு நோயாளர்கள் எழுமாறாக இனங்காணப்பட்ட நிலையில், டிப்போவில் கடமையாற்றும் 180 பேர் நேற்றையதினம் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது 21 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, அந்த டிப்போவில் தொற்றாளர்களது எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.

அதையடுத்து அந்த டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...