1734327046 death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் சோகம்: லொறி மோதி 11 வயது பாடசாலை மாணவி பலி!

Share

எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கானதோல – இலுக்குதென்ன வீதியின் 79-ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகில், மாணவி வீதியோரமாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதா என்பது குறித்து எலபாத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...