ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த உரையாடல்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 – 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர். அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் மஹிந்த, ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் தொடர்பில் விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கை தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment