water
செய்திகள்உலகம்

வெள்ளத்தில் சிக்கிய பேரூந்து : 3 பேர் பலி

Share

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதன்போது அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து உமர்கெட் தாலுகாவில் உள்ள ‘தஹாகயோன்’ பாலத்தில் செல்லும்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் சாரதி, நடத்துனர் தவிர நான்கு பயணிகள் பயணம்செய்துள்ளனர்.

இதில் பயணித்த ஆறு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவைளை ஆறு பேரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாரதி காணாமல் போயுள்ளார். இவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...