யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
செய்திகள்இலங்கை

மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி

Share

மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது – 61) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர், தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்துதுள்ளார். அது அண்மையில் உயிரிழந்துவிட்டது. அது இறந்த கவலையில் குறித்த குடும்பப்பெண் சுமார் 5 நாள்களாக சாப்பிடாமல் தண்ணீர் மற்றும் மென்பானம் மாத்திரம் அருந்திவந்துள்ளார். இந்தநிலையில், நேற்றுஅதிகாலை அவர் வீட்டிலேயே மயங்கியுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...