de
செய்திகள்இலங்கை

பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!!

Share

பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!!

பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இருந்த நிலையில் இன்று மாலை
உயிரிழந்துள்ளார்.

ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் நித்திரை செய்கிறார் என நினைத்து பஸ் நடத்துநர் அந்தப் பெண்ணை எழுப்பிய போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதையடுத்து அந்தப் பெணின் உடல் பாணந்துறை மருத்துவமனைக்கு பஸ் மூலமே எடுத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...