WhatsApp Image 2021 08 11 at 15.09.58
செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!

Share

பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!

பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன.

கிராமக்கோட்டு சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்-புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையுமே இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு கடைகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் அண்மைக்காலமாக பல்வேறு பதுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...