hemantha herath
செய்திகள்இலங்கை

நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

Share

நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுகாதாரத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. – இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் தொடர்ச்சியாக இந்தக் காரணிகளைச் சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆனால்,கொரோனா செயலணிக் கூட்டத்தில் நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான கொரோனாத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காதபோதும் இறுதிநேரத்தில் நாட்டை உடனடியாக முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நிலைமையைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மாற்றப்படலாம். எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...