images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

Share

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக, இன்று (ஒக்டோபர் 28) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த பகுதியில் வைத்து குறித்த பெண் சட்டத்தரணியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கியை மறைக்க உதவிய சட்டத்தரணி

சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைப்பதற்காக இந்தச் சட்டத்தரணி இஷாரா செவ்வந்திக்கு உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் மூளையாகச் செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை எடுத்துச் சென்று வழங்கியதாகக் கூறப்பட்டு வலைவீசித் தேடப்பட்டார். அவர் மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.

 

விசாரணையும் கைதுகளின் எண்ணிக்கையும்

இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.

 

இந்தச் சங்கிலித் தொடர் விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்திக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை இந்தப் பெண் சட்டத்தரணியையும் சேர்த்து 11 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று பேரும் (சட்டத்தரணி கைதுக்கு முன்வரை) நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது..

Share
தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...