ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!
2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.
செப்டம்பர் 1 ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் உரிமையாளருடன், ரிஷாத் பதியுதீன் தொடர்புகொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக ரிஷாத் பதியுதீன் கைதானமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment