1985ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா.
இவருக்கு தற்போது 55 வயது ஆகியுள்ள நிலையில் இன்னும் 25 அல்லது 30 வயது இளம்பெண் போல் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அவர் தனது இளமை ரகசியம் குறித்து கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
தனது இளமை ரகசியம் குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் அவர் கூறியது என்னவெனில் ’மனதில் மகிழ்ச்சியுடன், யார் மீதும் கோபப்படாமல் இருந்தால் இளமையாக இருக்கலாம் என்றும் இருப்பது சில ஆண்டுகள், அந்த சில ஆண்டுகளில் நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சோகம் இல்லாமல் கவலை இல்லாமல் இருப்பதே என்னுடைய இளமை ரகசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை நதியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் இதுவும் அவரது இளமைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Nadhiya