Actress
பொழுதுபோக்குஇந்தியாசினிமா

வடையில் இருந்த பிளாஸ்டிக் தொண்டையில் சிக்கி அவதிப்பட்ட நடிகை!

Share

ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகியிருந்தார்.

தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி சாப்பிட்டதாகவும், வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், அந்த உணவில் பிளாஸ்டிக் இருப்பதை அவதானிக்காமல் சாப்பிட்டமையால், தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும் மிகவும் சிரமப்பட்டு அதனை வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள் என்றும் எச்சரிக்கை தரக்கூடிய வகையிலும் பதிவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 196
செய்திகள்இந்தியா

டைம் 100 – 2026: உலகின் மிகச் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களைக் கொண்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘டைம் 100’ (TIME100)...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...