சூப்பர் ஸ்டார் ரஜனியின் அண்ணாத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
இந்த படத்தில் எஸ்.பி.பாசுப்பிரமணியம் பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி இறுதியாக பாடிய பாடலாக இது அமைந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் நடிகர் ரஜனிகாந் உருக்கமான பதிவொன்றை ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘ 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என பதிவிட்டுள்ளார்.
Leave a comment