22528142 1070070579799634 8101250546552910274 n
சினிமாபொழுதுபோக்கு

மே – இல் ஒன்றுகூடும் தென்னிந்திய நட்சத்திரங்கள்! – நடிகை ரோஜாவுக்கு பாராட்டு விழா

Share

1990 காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் இணைத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ரோஜா.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரோஜா திருணத்தின் பின்பு திரையுலகிலிருந்து சற்று விலகியிருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்ட ரோஜா , திருமணத்தின் பின்னர் அரசியலில் இறங்கினார்.

தற்போது ஆந்திரா சட்ட பேரவை உறுப்பினரான ரோஜா அண்மையில் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

அவரது பதவியேற்பு அண்மையில் இடம்பெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து சென்னையில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன.

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த ரோஜா சமீபத்தில் அமைச்சரான நிலையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகமே இணைந்து பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தென்னிந்திய தீயை நட்சத்திரங்கள் இணைந்து, எதிர்வரும் மே 7-ஆம் திகதி தென்னிந்திய திரையுலகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் , பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

roja

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...