போலீஸ் நிலையம் சென்ற சீரியல் நடிகை... பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் கணவர்
சினிமாபொழுதுபோக்கு

போலீஸ் நிலையம் சென்ற சீரியல் நடிகை… பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் கணவர்

Share

போலீஸ் நிலையம் சென்ற சீரியல் நடிகை… பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் கணவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இதனையடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தொடர்ந்து சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

அந்தவகையில் ஏற்கனவே மாகாபா ஆனந்த் உட்பட ஒரு சிலரின் பெயர்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் போட்டியாளரின் பெயர் வெளியாகி இருக்கின்றது. அதாவது சீரியல் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ரச்சிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

சமீபகாலமாக ரச்சிதாவிற்கும், தினேஷிற்கும் இடையில் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தினேஷ் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்டியுள்ளது. மேலும் கடந்த மாதம் தினேஷ் மேல் ரச்சிதா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்திருந்தமை பரபரப்பாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...