பொதுவாக நம்மில் பலருக்கு கருகரு என தலைமுடி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
முடி கருகருவென்று அடர்த்தியாக இருந்தால் எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு முடி உதிர்வு அதிகமாக காணப்படும்.
முடி உதிர்வினை தவிர்த்து தலைமுடியை கருகருவேன வளர செய்ய என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் – 3
- விளக்கெண்ணெய்- ஒரு ஸ்பூன்
செய்முறை
- ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி, இதை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
- பின்னர் மறுநாள் காலையில் ஊறிய கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து, மூன்று பெரிய நெல்லிக்காய்களை சேர்த்து, நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அரைக்கும் போது தண்ணீர் தேவைப்படும் பொழுது நீங்கள் சீரகம், வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். hair அந்த தண்ணீரிலும் சத்துக்கள் இருக்கும்.
- இதனை மெல்லிய காட்டன் துணியில் சேர்த்து நன்கு கிரீம் போல வடித்து வழித்து எடுத்துக் கொள்ளுங்கள். சக்கைகளை தூக்கி போட்டு விடுங்கள்.
- பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்தால், ஹேர் பேக் தயார். இதனை நன்கு கலந்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் நன்கு தலையை கட்டிக் கொள்ளுங்கள்.
- சீரகம் சேர்த்துள்ளதால் தலையில் நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தினுடைய குளிர்ச்சி நம்மை பாதிக்காது. இதனால் சளி பிடிக்க வாய்ப்புகள் இல்லை. அரை மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள்.
- இது போல வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள், முடியின் அடர்த்தி மற்றும் வலிமை அதிகரிக்கும் நல்ல கருகருவென முடி வளரும்.
Leave a comment