202201161608250922 1 vjs. L styvpf
பொழுதுபோக்குசினிமா

பாகுபாடின்றி வதைக்கும் கொரோனா! – சூப்பர் ஸ்டார்களுக்கும் தொற்று

Share

இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னைய அலைகளை விட தற்போதைய அலை திரை நட்சத்திரங்களை பெருமளவில் ஆட்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், மலையாள பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடிகர் மம்முட்டி ” எச்சரிக்கையுடன் செயற்பட்டும் நான் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதிகாரிகளின் ஆலோசனைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். மக்கள் அமைவரும் முகக்கவசம் அணிந்து அவதானமாக செயற்படுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் உலகநாயகன் கமலஹாசன், வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலங்களான நடிகை மீனா, த்ரிஷா, குஷ்பு, நடிகர் சத்யராஜ், அருண்விஜய் என பலருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...