24 66471ac08e507
சினிமாசெய்திகள்

படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

Share

படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பும், மோதலும் இருந்தாலும், இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் – அஜித் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளனர். அது ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் ஆகும். இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இனிமேல் நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை.

இந்த நிலையில், ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்த வந்த சமயத்தில், விஜய்க்கு மட்டுமின்றி அஜித்துக்கு சேர்த்து சாப்பாடு சமைத்து அனுப்புவாராம் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.

இதனை குஷி இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட அஜித், வெளிப்படையாக மேடையில் கூறினாராம். அஜித் இப்படி சொன்னவுடன் ஷோபா மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். சமீபத்தில் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...