24 66449590017f6
சினிமாசெய்திகள்

தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை.. அவர் CWCயில் இருந்து விலகாதது ஏன்? – வெங்கடேஷ் பட் பேட்டி

Share

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கடந்த 4 வருடங்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அதில் இருந்து விலகி தற்போது சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் மட்டுமின்றி செஃப் தாமுவும் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் திடீரென அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அளித்த பேட்டியில் தான் “அந்த சம்பவத்திற்கு பிறகு செஃப் தாமு உடன் பேசவில்லை. அவர் வாக்கு மாறினாலும், நட்பு மாறாது” என கூறி இருக்கிறார்.

குக் வித் கோமாளி தொடங்கியபோது விஜய் டிவி என்னை மட்டும் தான் நடுவராக இருக்க சொன்னார்கள், ஆனால் நான் தான் செஃப் தாமுவும் வேண்டும் என விஜய் டிவியை கட்டாயப்படுத்தி அவரையும் நடுவராக கொண்டு வந்தேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.

விலகுவதாக அறிவித்தபிறகு விஜய் டிவி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஒப்புக்கொண்டு தான் தாமு தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார், எனக்கு பிடிக்காததால் விலகிவிட்டேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...