tamilni Recovered 19 scaled
சினிமாசெய்திகள்

‘தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் புதிதாக இணைந்த இயக்குனர்.. ஜெயம் ரவியால் நடந்த சோகம்.

Share

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு இயக்குனர் இணைந்ததாகவும் ஆனால் ஜெயம் ரவியால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் தனது கடைசி படம் ஒரு காரசாரமான அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத், வெற்றிமாறன், அட்லி உள்பட ஒரு சில இயக்குனர்கள் விஜய் இடம் கதை கூறி இருப்பதாகவும் இருப்பினும் இன்னும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் சமீபத்தில் அந்தோணி பாக்யராஜ் இணைந்துள்ளார். அவர் கூறிய ஒரு அட்டகாசமான அரசியல் கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்கிறேன் என்று விஜய் அவரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’சைரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் சில காட்சிகளை ஜெயம் ரவி வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் அதனால் தான் இந்த படம் தோல்வி அடைந்ததாகவும் அந்தோணி பாக்யராஜ் தரப்பில் கூறியுள்ள நிலையில் இந்த படத்தின் தோல்வி காரணமாக ’தளபதி 69’ படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்று புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’தளபதி 69’ வாய்ப்பை ஜெயம் ரவியால் இழந்தேன் என்று அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...