91259560
சினிமாசெய்திகள்

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த சிவகார்த்திகேயன் படம்

Share

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ.40 கோடிக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமை ரூ.45 கோடிக்கும் ஆடியோ உரிமை 4 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ.100 கோடி இந்த படம் வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

’டாக்டர்’ மற்றும் ‘டான்’ படங்களை அடுத்து ’பிரின்ஸ்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை தரும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#cinemanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....