1 41
சினிமா

ரணிலை புறக்கணிக்கும் மொட்டு கட்சி! காரணத்தை வெளியிட்ட சாகர

Share

ரணிலை புறக்கணிக்கும் மொட்டு கட்சி! காரணத்தை வெளியிட்ட சாகர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் கட்சியுடன் பேசவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ரணில் 13ம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார் எனவும் அதற்கு தமது கட்சி ஆதரவளிக்கவில்லை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமக்கு ஆதரவு வழங்குமாறு கட்சியிடம் கோரியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காரணிகளை கருத்திக் கொண்டு ரணிலுக்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...