24 660fa1319900f scaled
சினிமாசெய்திகள்

நடிகை மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் முக்கிய நபர் மரணம்.. சோகத்தில் குடும்பம்

Share

நடிகை மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் முக்கிய நபர் மரணம்.. சோகத்தில் குடும்பம்

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா ஜாஸ்மின். தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் விஜய்யுடன் புதிய கீதை, விஷாலுடன் சண்டைக்கோழி, மாதவனுடன் ஆயுத எழுத்து என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பிசியான நடிகையாக இருந்து வந்த மீரா ஜாஸ்மினுக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

அணில் ஜான் என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இதன்பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது தமிழில் டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை மரணமடைந்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த தகவலை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த வகையில் தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...