4 50
சினிமாசெய்திகள்

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

Share

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2019ல் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.

இப்படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அறிமுக படத்திலேயே தனது வெற்றியை பதித்து, தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு, ஆர்.ஜே. ஆனந்தி என பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜெயம் ரவி கிடையாதாம். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் விருப்பப்பட்டு, அவரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காரணத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி, “இவ்வளவு பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால், கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்கவில்லை” என்றும், அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...