4 49
சினிமாசெய்திகள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் Love Insurance Kompany மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது, இந்த தகவல் குறித்து கூடுதல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பிரதீப் நடிக்கப்போகும் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லீ படத்தையும் மைத்ரி மூவி நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...