25 68453b76d4fcc
சினிமாசெய்திகள்

நடிகை கவுதமியின் வீட்டின் அருகே வேலை பார்த்த அஜித்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா, இதோ

Share

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் மொத்தம் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஆதிக் கூட்டணி இணையவுள்ளது.

ஆம், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரபல நடிகை கவுதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்து பேசிய நடிகை கவுதமி, “ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். அவர் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68492b8d2bd89
உலகம்செய்திகள்

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சபாத் மையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் மத, பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பான நடவடிக்கைகளுக்காக நிறுவப்பட்ட...

25 684929aae08be
இலங்கைசெய்திகள்

மாநகரசபையொன்றின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய அநுர தரப்பு

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது. இன்று (11)...

25 6848f357eab31 1
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை அதிகாரிகள்

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக...

25 684921214c034
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு விவகாரம்! நீதிமன்றில் முன்னிலையாவாரா அதுல

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதுல திலகரத்ன,...