25 684578d12b30a 7
சினிமாசெய்திகள்

ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய பிரபல சீரியல் நடிகை.. எந்த தொடருக்காக?

Share

தொலைக்காட்சிக்கு மவுசு கூட அதில் வரும் பிரபலங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

எந்த ஒரு தனியார் நிகழ்ச்சி, கடை திறப்பு விழா என எதுவாக இருந்தாலும் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தை தாண்டி வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அழைக்கப்படுகிறார்கள். மக்களின் கவனம் சின்னத்திரை பக்கம் பெரிய அளவில் உள்ளது.

தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் போது பிரபல நடிகை ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் வரை சம்பளம் வாங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

அவர் வேறுயாரும் இல்லை இப்போது அரசியலில் மாஸ் காட்டிவரும் வரும் ஸ்மிருதி இரானி தான்.

நடிகை, அரசியல்வாதி, ஃபேஷன் மாடல், தொலைக்காட்சி தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் முதன்முறையாக கியூங்கி சாஸ் பி கபி பஹுதி என்ற தொலைக்காட்சி தொடரில் துளசி இரானி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட காலம் ஓடிய தொடர்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ.8,000 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

தொடர் மக்களிடம் மிகவும் பிரபலமாக பின்னர் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை சம்பளம் பெற்றாராம்.

அதன் பின்னர் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூதி’ தொடரின் புதிய சீசனில் நடிப்பதற்காக அவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் இந்திய சின்னத்திரை நடிகைகளின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமையை பெருகிறார் ஸ்மிருதி இரானி.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...