25 68453b76d4fcc
சினிமாசெய்திகள்

நடிகை கவுதமியின் வீட்டின் அருகே வேலை பார்த்த அஜித்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா, இதோ

Share

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் மொத்தம் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஆதிக் கூட்டணி இணையவுள்ளது.

ஆம், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரபல நடிகை கவுதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்து பேசிய நடிகை கவுதமி, “ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். அவர் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...