25 68453b76d4fcc
சினிமாசெய்திகள்

நடிகை கவுதமியின் வீட்டின் அருகே வேலை பார்த்த அஜித்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா, இதோ

Share

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் மொத்தம் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஆதிக் கூட்டணி இணையவுள்ளது.

ஆம், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரபல நடிகை கவுதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்து பேசிய நடிகை கவுதமி, “ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். அவர் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...