சினிமாசெய்திகள்

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

Share

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வருமானமும் பெருகியுள்ளது. இந்த நேரத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், KFC கடையில் சைவ உணவுகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 5 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் இறைச்சியையும், மதுபானங்களையும் விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே, Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...