எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. நடிகை வித்யா பாலன்!!

24 662ca62bdde3f

எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. நடிகை வித்யா பாலன்!!

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் ஒரு விருதுவிழா ஒன்றில் கலந்துகொண்டேன்.

எனக்கு ‘ஹேய் பேபி’ படத்தில் நடித்ததற்காக விருது கொடுத்தனர். அந்த விருதை அறிவித்த சமயத்தில் என்னுடைய உடைகளை நான் தேர்வு செய்தது இல்லை. அதை ஆடை வடிவமைப்பாளர்தான் தயார் செய்து இருந்தார்.

அந்த ஆடையை அணிந்துகொண்டு தைரியமாக பேசமுடியவில்லை. அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டேன்.

அந்த அவமானத்தை நினைத்து இரவு முழுவதும் தூங்கவில்லை. தனியாக இருப்பது போல் உணர்ந்தேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version