1000 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றவே மகளுக்கு 2வது திருமணமா? ஷங்கர் குறித்து பிரபல பத்திரிகையாளர்..!
இயக்குனர் ஷங்கர் தனது 1000 கோடி ரூபாய் சொத்தை காப்பாற்றுவதற்காக தான் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோகித் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஐஸ்வர்யா அவரை பிரிந்து வந்து விட்டார். அதுமட்டுமின்றி ரோகித் தன்பாலின உறவில் இருப்பதாகவும் அதனால் அவருடன் வாழ முடியாது என்று ஐஸ்வர்யா சொன்னதாக பிரபல பத்திரிகையாளர் பரமேஸ்வரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்ட ஐஸ்வர்யாவுக்கு தருண் கோபிநாதன் என்பவரை மாப்பிள்ளையாக ஷங்கர் தேர்வு செய்துள்ளார். தருண் கோபிநாதன் உதவி இயக்குனர் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி செய்பவர் என்றாலும் அவரது குடும்பப் பின்னணி ஒழுக்கமானது என்றும் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் நல்ல பையன் என்றும் கேள்விப்பட்டதை அடுத்து மகளை அவருக்கு கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தன்னுடைய 1000 கோடி ரூபாய் சொத்துக்கு தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரே மகன் தான் வாரிசு என்பதால் முதல்கட்டமாக இரண்டு மகளுக்கும் தான் இருக்கும்போதே நல்ல குடும்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் மகளுக்கு அவசர அவசரமாக இரண்டாவது திருமண ஏற்பாடு செய்திருப்பதாகவும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
தருண் கோபிநாதன் ஷங்கரின் குட் புக்கில் இடம் பெற்றவர் என்பதும் ’2.0’ தயாரித்துக் கொண்டிருந்தபோது தருண் கோபிநாதன் தான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்தது என்றும் அப்போதே ஷங்கருக்கு அவரை நன்றாக தெரியும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் தனது மூத்த மகளுக்கு ஒரு நல்ல மணமகன் அமைந்து விட்டார் என்ற சந்தோஷத்தில் தற்போது ஷங்கர் இருப்பதாகவே அவரது வட்டாரங்கள் கூறுகின்ற