tamilni 384 scaled
சினிமாசெய்திகள்

சும்மா அதிருதுல்ல.. தானாக முன்வந்து அரசு கொடுத்த பாதுகாப்பு.. விஜய்யின் கேரள எண்ட்ரியால் பரபரப்பு..!

Share

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதை அடுத்து விஜய் உட்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் செல்ல உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ’கோட்’ படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்று விட்டதை அடுத்து இன்று விஜய் திருவனந்தபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் திருவனந்தபுரம் வருகிறார் என்ற தகவல் அறிந்து கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடி இருப்பதாகவும் ஏராளமான கூட்டம் அங்கு கூடியதை அடுத்து கேரள அரசு தானாகவே முன்வந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்க யாருமே இல்லை என்றும் ஆனால் தளபதி விஜய்யை வரவேற்க ஏராளமான கூட்டம் கூடி இருப்பதால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்திலும் தளபதி விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கூடி இருப்பதாகவும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக வந்த கூட்டத்தை பார்த்து சும்மா அதிருதுல்ல என்ற வசனம் தான் ஞாபகம் வருவதாக கேரள விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏற்கனவே விஜய் படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்த நிலையில் தற்போது கேரளாவிலும் அவருக்கு கூட்டம் கூடி இருப்பதை பார்க்கும் போது விஜய் ஒரு தென்னிந்திய நடிகர் என்பதை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...