dc Cover 5k9pi8fe85cku601f4a84riv74 20191029224104.Medi
சினிமாசெய்திகள்

லதா ரஜினிகாந்திற்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

Share

லதா ரஜினிகாந்திற்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கோச்சடையான் படத்திற்காக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் கோச்சடையான்.

இப்படத்தில் முதன்முறையாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது, மீடியா ஒன் என்டர்டெயின்ட் சார்பில் முரளி தயாரித்திருந்தார்.

இதற்காக ஆர்ட் பீரோ என்ற நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி ரூபாயை முரளி கடனாக பெற்றிருந்தார்.

இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஜாமீன் கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில் கோச்சடையான் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததாக முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி லதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது, எனினும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியது.

தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் லதா ரஜினிகாந்த் ஆஜராகாமல் இருந்ததால் ஜனவரி 6ம் திகதிக்குள் ஆஜராகாமல் இருந்தால் கைது செய்யப்படுவார் என கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...